Sunday, January 31, 2010

விவாகரத்து!


காதலித்தார்கள்..
கரம் பிடித்தார்கள்...
கவலையின்றி...
கரை சேர்ந்தார்கள்..!

இது இயல்பு வாழ்க்கை...

இருமனம் இணைந்து...
திருமணம் முடிந்து..
கணம் கணம் கடிந்து...
வனம் போல முடிந்தால்...

அது என்ன வாழ்க்கை?

ஈன்ற பிஞ்சுகளின்
ஈர விழிகளுக்கும்...
பார மனதிற்கும்..
கோர வாழ்க்கை ஏன்?

பத்து பேர் முன்னிலையில்..
முத்து முத்தாய் சிதறிய
ரத்து செய்யப்பட்ட உறவு
செத்து தொலைந்துவிட்ட மகிழ்வு!!

ஒரு நாள் தகப்பனோடு
மறுநாள் தாயோடு..
இன்னொரு நாள் துயரத்தோடு..
ஒவ்வொரு நாளுமே துக்கத்தோடு..!!

பந்தாடும் அலைச்சல் ஒரு பக்கம்..
வந்தாடும் உளைச்சல் ஒரு பக்கம்...
இசைப்பாடும் இரைச்சல் ஒரு பக்கம்..
பாடு படும் மனம்தான் எப்பக்கம்???

2 comments: