Thursday, January 21, 2010

புதைக்குழிக்குள் நாங்களா???


செத்துத் தொலைய வேண்டுமாயின்
தொலைந்துப்போ!!!
மடிந்து மண்ணோடு
மண்ணாக வேண்டுமாயின்
மடிந்துப்போ!!!
பேருந்தில்.. மகிழுந்தில்..
சாலையில்.. சோலையில்..
காலையில் மாலையில்..
எத்திக்கிலும் நீ...!!
எங்குப்பாரினும் நீ..!!
எவ்வேளையும் நீ...!!
எமனவனை உன் கரத்தில்
எதற்காக ஏந்திட்டாய்?
எவர்எவர் வாழ்வையெல்லாம்
ஏனோ அழித்திட்டாய்?
தவறிழைக்கா நாங்கள் ஏன்
தண்டிக்கப்பட்டோம்?
வாழத்துடிக்கும் நாங்கள் ஏன்
வாழ்விழந்து நின்றோம்?
புகைப்பவன் நீ
புதைக்குழிக்குள் நாங்களா?
சிந்தியுங்கள்!!
புண்ணாகிப்போவது உங்கள் உருபென்றால்,
மண்ணாகிப்போவது எங்கள் மரபன்றே??
புகைப்பதை நிறுத்துங்கள்-என்றும்
புகையா மனிதரை சாம்பலாக்காதீர்!!

No comments:

Post a Comment