Saturday, August 3, 2013

எல்லிநாயகனே!



முற்றும் தெரிந்தவனே 
முறிசெய்தான்  என்னை 

முளையான் என்றிருந்தேன்
முற்பாடனென அறியேன் 

கன்னலமு தென்றான் 
கன்னித்  தமிழென்றான் 

எல்லைத்  தகர்த்திட்டே 
என்வசம்   நீவாவென்றான் 

எய்தகாதற் அம்புகற்கு 
எதிர்முகம் நேசமென்றான்!

செந்நிறுவிட காதலினை 
செந்தேனே வாவென்றான்  

அகத்தின் அற்புதனானவனே
அன்பின் ஆராவமுதமவன்

அவ்வோன் ஆரென்றறிவீரோ?
அவனென் எல்லிநாயகனே!

vayathu muthirntha kulanthaigal (வயது முதிர்ந்தக் குழந்தைகள்)