Sunday, March 11, 2012

அகவல்





அகநிலை அறிந்தோனே -எந்தன்
அகவல் கேளாயோ -நான்
அகிலம் மறந்ததென்ன -உந்தன்
அகக்கண் பார்வையிலே

எழிலிய காதலினாற் - விழி
எழும்பிடக் களைக்குதைய்யா -கவி
எழுதிட முடிவதில்லை - புவி
உழலுதல் தெரிவதில்லை

முந்தைய துயரினையே -நான்
உன்தயவால் மறந்தேன் -முன்
அகத்தில் வீற்றிருந்தாய் -பின்
அகத்தானை மலர்ந்தாய்!

மங்கல தினத்தன்று -எங்கும்
மங்கல பாவொலிக்க -அங்கு
மகிழ்நன் நீயாவாய்! -என்னுள்
மகிழ்தல் வேர்விடுமே!